districts

img

ராயலோக் பர்னிச்சர் ஷோரூம்  ஈக்காட்டு தாங்கலில் திறப்பு

சென்னை, பிப்.24- சில்லறை பர்னிச்சர் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் ராயலோக் பர்னிச்சர் தனது 6வது ஷோரூமை சென்னை ஈக்காட்டுதாங்கலில் திறந்துள்ளது.   சென்னை நகர மக்களின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான அனைத்துவித பர்னிச்சர் பொருட்களும் இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளது. இங்கு வீட்டிற்கு தேவையான சோபா, கட்டில், நாற்காலி வகைகள் மற்றும் அனைத்துவிதமான பர்னிச்சர் பொருட்களும், அலுவலகங்களுக்கு தேவையான மேஜை நாற்காலி உள்ளிட்ட பொருட்களும் உள்ளன. திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகைகளையும் வழங்குவதாக நிறுவனத்தின் தலைவர்  விஜய் சுப்பிரமணியம், நிர்வாக இயக்குனர் மதன் சுப்ரமணியம், சில்லறை விற்பனை பிரிவு தலைவர் எச்எஸ் சுரேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.